Showing posts with label Law college. Show all posts
Showing posts with label Law college. Show all posts

Sunday, November 16, 2008

சட்டக் கல்லூரி - சதுரங்க மேடை

சட்டக் கல்லூரியில் கலாட்டா, அடிதடி. இது இன்று நேற்று தோன்றிய கலாச்சாரம் அல்ல!

நான் பள்ளி கல்லூரியில் படிக்கும் பொழுதே தொடங்கிய ஒரு கேவலம் தான்..நாளாக நாளாக பூதமாக வளர்ந்து இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது.

இதற்கு காரணம் யார் ? முக்கியமாக அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தான். கல்லூரிகள் அரசியல்வாதிகளின் பகடைக்காய்கள். அவர்கள் ஆட்ட ஆட்ட ஆடும்..மாணவர்கள் (பல ரவுடிகள் மாணவர் வேஷம் அணிந்து ) நூலில் ஆடும் பொம்மைகள் தான் !!!

இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பொதுஜனம்.

சென்ற வாரம் நடந்த அமளியில் போலீஸ் வேடிக்கை பார்த்தது கண்டு பலர் சீறுவது புரிகிறது. அங்கும் அரசியல் ஆதிக்கம் தான் !!

இந்தியாவில் இன்று போலீஸ் ஒரு கை இல்லாத பொம்மை!! பல கொலைகள், பல சட்ட விரோத செயல்கள் யாரும் கேட்பாரற்று இருப்பது எல்லோருக்கும் தெரிந்த கதை தான்.

சரி...இவை மாற என்ன செய்யலாம்.! முதலில் அரசியல் மாற்றம், மக்களிடையே விழிப்புணர்வு (மாணவர்கள் உட்பட) எல்லாம் வேண்டும்.

இந்த அவலத்தை படம் பிடித்து, எழுதி மக்களுக்கு அளித்த தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு பாராட்டுக்கள். ஜனநாயகத்தில், செய்தி நிறுவனங்களுக்கு பெரும் இடம் இருக்கிறது. பத்திரிக்கை சுதந்திரம் ஜனநாயகம் வளர ஒரு முக்கிய இயந்திரம்.

எனக்கு இந்த தலைமுறை இளைவர்களிடம் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது. இருந்தும்...மாற்றம் வரும் என்று ஒரு சிறு நம்பிக்கை இதயத்தில் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது.

விரைவில் வந்தால்..நாட்டுக்கு நல்லது. இல்லையேல்.....!!!