Sunday, August 14, 2011

பணம்


நன்றி ( இணையதளம்)

பணம்தான் பணம்தான்னு சொன்னாங்க - இல்லையின்னா
நாய் கூட மதிக்காது இன்னாங்க 
பணம்தான் பணம்தான்னு சொன்னாங்க - இல்லையின்னா
பிச்சைதான் வாழ்க்கை பூரா இன்னாங்க 

குணம்தான் குணம் தானுன்னு சொன்னேங்க - நான் 
சாகும் வரை அது காக்கும் இன்நேங்க
குணம் தான் குணம் தானுன்னு சொன்னேங்க இப்போ
தப்புன்னு  உணர்ந்து வருந்தி நின்னேங்க

----
பிறக்கையில பணம் வேணும் தெரியுமா - அடடா
மணக்க கூட பணம் வேணும் பெரியம்மா 

வளர்க்க பணம் வேணும் - உடுக்க பணம் வேணும் 
பசிக்கு  பணம் வேணும் - படிக்க பணம் வேணும் 

கட்டையிலே போகும் நேரம் வரும்போது -  நீ
கட்டையிலே போகும் நேரம் வரும்போது

பணம் இல்லையினா.. அடக்கம் கூட கிடையாது !
பணம் இல்லையினா.. அடக்கம் கூட கிடையாது !   

---

அஞ்சுலே இத்த நீயும்  உணரணும் - உன்
நெஞ்சிலே உரத்த போட்டு  வளர்க்கணும்

பிஞ்சிலே பழுத்ததுன்னு சொன்னாலும் - நீ
அஞ்சு -  பத்து  தினம் சேர்க்க பழகணும்

துன்னுரத  கொரைக்கணும் - தூங்குறத மறக்கணும் 
சுத்துரத நிறுத்தணும் - வெட்டி பேச்சு கொரயணும்!

இப்படியே பணத்த நீயும் சேர்தாக்க - அத 
பொட்டியிலே போட்டு வெச்சு வாழ்ந்தாக்க - அட 

அம்பது அருவதெல்லாம் கொண்டாட்டம் - உயிர்
போகும் நேரம் இல்லை இல்லே திண்டாட்டம்!

அம்பது அருவதெல்லாம் கொண்டாட்டம் - உயிர்
போகும் நேரம் இல்லை இல்லே திண்டாட்டம்!

4 comments:

ashok said...

adda...arumai!

Jeevan said...

panam illana ponamnu sonnanga... aana ippa ponama ponalum panathoda thaan poganum pola! good writeup friend.

saradha said...

i like it

prabukarthik said...

Good one NV sir!