Sunday, February 21, 2010

வாழ்க்கை

வயசாச்சு
தலை எல்லாம் நரைச்சாச்சு
கை கால்கள் ஒஞ்சாச்சு
ஏன் வாழ்க்கை? என்றாச்சு

மனைவி மக்கள்
அண்ணன் தம்பி
உறவெல்லாம் போயாச்சு
தாய் தந்தை நண்பர் மட்டும்
இனி என ஆயாச்சு!

கவிஞர் பாடியதென்றாலும் இதை
உணரும்போது வலிக்கிறதே
உலகம் எல்லாம் இதுதானே - ஆனால்
நமக்கென வந்தால் கசக்கிறதே

போதும் போதும் தெய்வங்களே
வாழ்க்கை போதும் - அழைத்திடுவீர்!

போதும் போதும் தெய்வங்களே
வாழ்க்கை போதும் - அழைத்திடுவீர்!

2 comments:

(Mis)Chief Editor said...

Please send it to Mr M Karunaanidhi!

Anonymous said...

really a touching one anna (brother!)