Saturday, November 17, 2007

சலவை செய்த உள்ளம்

"சலவை செய்த உள்ளம் வேண்டும்"
இறைவனைக் கேட்டேன்.

"அளவைச் சொல் " என்றான் இறைவன்.

" முழுதும் " என்றேன் நான்.

" மடையா - அறிவு எங்கே?
உடையா இது ?
தினம் மாற்ற " ?

"ஐயா" ...என்றேன் நான்.

" நான் கொடுத்ததே சுத்த வெள்ளை இல்லை
இன்றைய உலகில் வெள்ளை வேலை செய்யாது
வெள்ளையை கருப்பாக்கு
உறுப்படுவாய் "


- மறைந்தார் இறைவனார்!