Showing posts with label தமிழ் திங்கள். Show all posts
Showing posts with label தமிழ் திங்கள். Show all posts

Monday, August 04, 2008

தமிழ் திங்கள்

இனி திங்கள்தோறும் தமிழில்...தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றி எழுதவேண்டும் என முடிவெடுத்துள்ளேன்.

ஏன் இந்த முடிவு ? சும்மா தான். தமிழ் மொழி தேய்ந்து அழிந்து விடுமோ என்ற பயம் எனக்கு தோன்றியுள்ளது.

இனி உலகம் உருண்டை இல்லை என்ற நிலை உருவான பின், நம்மூரில் பல மொழிகள், அவற்றில் இலக்கிய இலக்கணங்கள் படிப்பார் அற்று பேச்சளவில் மட்டும் வாழ்ந்து வருவது ரொம்ப வருத்தத்தை தருகிறது.

இது போன்ற சின்ன சின்ன முயற்சிகள் ஒருவேளை இளையவர்களின் ஆசையை தூண்டினால் அவர்கள் துணைகொண்டு நமது தமிழ் இலக்கிய இலக்கணங்கள் மீண்டும் உயிர் பெறுமோ என்ற பேராசையில் இதோ :

திரிகடுகம்



காலம் நாலாம் நூற்றாண்டு

திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளை குறிக்கும்.



மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம்.



இதனாலேயே இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது.

( இதோ ஒரு செய்யுள் )


காக்கப்பட வேண்டியவை


சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்


தாளினால் தந்த விழுநிதியும் - நாடோ றும்


நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்


இம்மூன்றும்காப்பிகழ் ஆகாப் பொருள்.



{பொருள் தெரியவில்லை - தெரிந்தால் தயவுசெய்து எழுதுங்கள்}