Sunday, April 27, 2008

தசாவதாரம்

Photo courtesy: Dasavatharam.net

அவியலை நம்பி வாழும்
திரை உலகில் ( ஒவ்வொறு முறையும் )
புது படையலை படைக்க நினைக்கும்
கலைஞனே - வாழ்க!


கை காலாட்டி
மாயை செய்யும்
பொய் வாழும் திரை உலகில்
மெய் காட்டல் - இனிக்குமா?
நோய் போக்கி மணக்குமா?


அரைத்த மாவுடன் - கொஞ்சம்
இலை தழை சேர்த்து
வெள்ளை வாடையுடன்
தின்னப் படைத்தால்
போதுமே எமக்கு!
ரசிப்போமே
குதிப்போமே

ஏன் இந்த அறிவியல் ஆயுர்வேதம்?


இட்லி தோசை தின்னு வளர்ந்த
தேகமைய்யா - உம்முடைய
வல்லாரை துவையல்
ஒவ்வுமா ? .... அல்லது

(PRODUCERஐ)
கல்லறை கொண்டு செல்லுமா?

No comments: