Thursday, September 14, 2006

சபாஷ் கணேஷ்!

என் தமிழ் எழுத்துக்கள் குறைந்து விட்டாலும்...
தம்பி கணேஷின் தமிழ்ப் பணி தொடருகிறது!

=====================

ஏறியது நச்சு
காலப் போக்கில்
கவிஞர் நாக்கில் !!

கிடக்கிறது தமிழ்த் திரையுலகம்
பள்ளத் தாக்கில் !!

வாத்ஸ்யாயனரே
வாயை மூடும் அளவுக்கு
காமக் கலவை !!

நாளும் விடலைகளுக்கு
செய்கின்றன
அவைமூளைச் சலவை !!

தமிழக அரசின்
கர்ச்சனை..
கோயில்களில் இனி
தமிழில் தான் அர்ச்சனை !!

திரைப் பாடல்களுக்கு
இவ் விதி ஏன் தளர்ந்தது?

தமிழ் பாடல்களில்
பிற மொழி ஆதிக்கம்
ஏன் வளர்ந்தது?
=====================